மும்பை: அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த மாதம் 2 முதல் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்திலும் வாகன விற்பனை சரிந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. கனரக வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், கடந்த மாதம் உற்பத்தி நிறுத்தம் அறிவித்தது. இதை மேலும் 5 நாட்கள் நீட்டித்து, கடந்த மாதம் 28ம் தேதி, 30ம் தேதி, அக்டோபர் 1, 8 மற்றும் 9 ஆகிய 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் அறிவித்தது.