புதுடெல்லி: ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக சரிந்தது. இதை தொடர்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்த பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், இதற்கு ஏற்ப வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சூழலை உருவாக்கவும் 5வது முறையாக ெரப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது.