சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், விடுமுறையில் இருந்த பேராசிரியர் ஒருவருக்கு, வகுப்பறையில் தூங்கியதாக மெமோ அளித்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் 25 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 150 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் வைத்தியநாதன், உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தங்கவேல், நேற்று முன்தினம் மெமோ ஒன்றை அனுப்பினார். அதில், ‘கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று, காலை 10.10 மணிக்கு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டிய நேரத்தில், வகுப்பறையிலேயே தூங்கியதாக, மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.