குலசேகரன்பட்டினம்; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் கோயிலுக்கு வரும் தசரா குழுவினர் மிக அதிர்வை ஏற்படுத்த கூடிய டிரம்ஸ் வாசிக்க தடை விதித்து போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழாவில் கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா குழுவினருக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். தசரா குழு பக்தர்கள் வேலாயுதம், சூலாயுதம், அரிவாள், கத்தி, வாள் போன்ற இரும்பினால் ஆன ஆயுதங்களை கொண்டுவரக்கூடாது. அதனை தங்கள் வாகனத்திலோ அல்லது குழுத்தலைமையிடத்திலோ வைத்து விட்டு தான் கண்டிப்பாக வரவேண்டும். கோயில் பகுதிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்படும்.