மதுரை: மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணத்தை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் நீட் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தான் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, தற்போது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, ஆண்டுதோறும் தேசிய தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு AIIMS, ஜிப்மர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் AIIMS, நுழைவு தேர்வு கட்டணத்தை விட NEET- PG நுழைவு தேர்வுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.