கன்னியாகுமரி: பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் சூழல் விரைவில் உருவாகும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜ ஆதரவு அளிக்கும் என்றார்.