வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் 29.5 லட்சம் பேர் வாக்காளர் அட்டையை சரிபார்த்துள்ளனர்: சத்யபிரதா சாஹூ

சென்னை: வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் 29.5 லட்சம் பேர் வாக்காளர் அட்டையை சரிபார்த்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். 1.65 லட்சம் பேர் வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர் என்றும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் தப்பிக்போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ராதாபுரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது, அவை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மறுவாக்கு எண்ணிக்கைக்கு 24 அலுவலர்களை கேட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: