மணமேல்குடி: மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நாயிடம் அகப்பட்ட புள்ளிமானை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள செய்யானம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்போது அங்கிருந்த நாய்கள் மானை விரட்டி பிடிக்க முற்பட்டதால் அந்தமான் அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட அக்கிராம மக்கள் நாய்களிடம் இருந்து அந்த மனை காப்பாற்றினர்.