பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி டிரைவரை தாக்கி, கன்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கடந்த 29ம் தேதி இரவு 10.30 மணியளவில் காரும், கன்டெய்னர் ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சேதம் அடைந்தது. இதையடுத்து காரில் இருந்த 5 பேர், லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த அர்ஜூனன்(41) என்பவரை ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், சேதமடைந்த காரை சரிசெய்ய ₹60 ஆயிரம் வழங்கும்படி தகராறு செய்தனர். பின்னர், அர்ஜூனனை அழைத்துக்கொண்டு ஒருவர் கன்ெடய்னர் லாரியில் சென்னை நோக்கி சென்றார். மற்ற 4 ேபரும் காரில் லாரிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தனர்.பெரும்புதூர் அருகே சென்றபோது காரை திடீரென நிறுத்தி இறங்கிய 4 பேரும், லாரியை நிறுத்தியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து அர்ஜூனனை துப்பாக்கியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கினர். ஆனால் அவர்களிடமிருந்து அவர் தப்பி சென்றார். இதையடுத்து 5 பேரும் லாரியை கடத்தி சென்றனர்.