கனமழையால் சதுரகிரியில் சிக்கிய பக்தர்கள் மீட்பு

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நவராத்திரி விழா கடந்த செப்.29ம் தேதி தொடங்கியது. அன்றிரவு சதுரகிரி கோயில் பகுதியில் கனமழை பெய்ததால் தாணிப்பாறை, வழுக்கல்பாறை, சங்கிலிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பக்தர்கள் கோயிலிலிருந்து அடிவாரம் வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், நேற்று 25 பக்தர்களை கயிறு கட்டி மீட்டு கோயிலிலிருந்து அடிவாரம் வரை பத்திரமாக அழைத்து வந்தனர்.

Related Stories: