புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம்(பிபிசிஎல்), ஷிப்பிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா(எஸ்சிஐ) உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்குகளை விற்பதன் மூலம் 65,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் இந்தியா முழுவதும் நான்கு இடங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களையும், 6,000க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் மையங்களையும் கொண்டுள்ளன. தற்போது பாரத் பெட்ரோலியத்தின் உலகலாவிய சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பாரத் பெட்ரோலியத்தையும் (பிபிசிஎல்) தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, பங்கு விலக்கலுக்கான மத்திய அரசின் செயலர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, பாரத் பெட்ரோலியத்தில் அரசுக்கு 53.3 சதவிகிதமும், ஷிப்பிங் கார்ப்பரேஷனில் 63.8 சதவிகிதமும் பங்குகள் உள்ளன. அதேபோல், நீப்கோ மற்றும் தெஹ்ரி ஹைட்ரோ நிறுவனங்களிலும் பங்குகள் உள்ளன.