கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குன்னூர்: குன்னூரில் கனமழை பெய்து வருவதால் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரேலியா அணை கரன்சி, ஜிம்கானா போன்ற தடுப்பணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் மலைகளுக்கு இடையே கொட்டும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories: