மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மூத்த மகனும் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஆதித்யா ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஒர்லி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. சுனில் ஷிண்டே, தனது இடத்தை ஆதித்யா தாக்கரேக்கு விட்டுக் கொடுத்துள்ளார். சிவசேனாவுக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாக ஒர்லி இருக்கிறது. எனவேதான் அந்த தொகுதிக்கு ஆதித்யா தாக்கரேயின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்ததால் ஆதித்யா தாக்கரேயின் வெற்றி இன்னும் எளிதாகி இருக்கிறது” என்றார்.
