சென்னை: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை புறக்கணிப்பு செய்யும் கனரா வங்கிக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ எச்சரித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் உள்ளிட்ட ‘குரூப் டி’ பணி இடங்களுக்கு, ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு செய்துள்ள 528 பணியாளர்களுள், 475 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 572 பேர்களுள், வெறும் 11 பேர் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.கனரா வங்கிக்கு எதிராக அறப்போராட்டம் வங்கி பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு: வைகோ எச்சரிக்கை
- இளைஞர்கள் வங்கி பிரச்சாரத்தை புறக்கணிக்கின்றனர்
- தமிழ்
- வங்கியின் சாசனத்தை வைகோ எச்சரிக்கிறார்
- வைகோ
- கனரா வங்கி