மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆலந்தூர்: சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஐஐடி வளாகம் சென்றார். முன்னதாக, கிண்டி தொழிற்பேட்டை அருகே தீரன் சின்னமலை சிலை அருகே, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வத்தாமன், துணை தலைவர் நரேஷ் ஆகியோர் தலைமையில் 7 பேர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, ‘கோ பேக் மோடி’ என்ற பதாகைகளுடன் கோஷமிட்டபடி வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு வந்ததும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து ெசன்றனர்.

Related Stories: