பண்ருட்டி: பண்ருட்டி காந்திரோட்டில் ஹஜ்ரத் நூர்முகமது ஷா அவுலியா தர்கா உள்ளது. 100 ஆண்டிற்கு மேல் பழமை வாய்ந்த இந்த தர்காவில் கந்தூரி உருஸ் பண்டிகை திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய பண்டிகையான சந்தனகூடு திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு அவுலியாவின் ரவுலா ஷெரீப் பீடத்தை பூவணி போர்வையால் அலங்கரித்து மேல் ரவுலா ஷெரீப்பிற்கு சந்தனம் அணிவித்து சந்தன கலசம் கூண்டில் ஏற்றப்பட்டு பேண்டு வாத்தியங்கள் மற்றும் சகல மேள வாத்தியங்களுடன் வாண வேடிக்கையோடு சந்தனகூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தது.