திண்டிவனம்: திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் புகுந்து மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள், தட்டிக்கேட்ட ஆசிரியரையும் உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியைை சேர்ந்த சமூக விரோதிகள் குடிபோதையில் அவ்வப்போது பள்ளியில் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், கேலி செய்தும் வருகின்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது.