நாகை: திருவள்ளூர், நாகை, ஊட்டி, தூத்துக்குடி, திருப்பூரில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல அலுவலகங்களை திடீரென மூடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நிர்வாக வாசதிக்காக கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், விழுப்புரம், சென்னை மாநகரம், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் என 9 கோட்டங்களாக பிரிக்கப்பட்டது. இந்த கோட்டங்களில் இருந்து 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் வாகன வசதிகள் செய்யப்பட்டது. இந்நிலையில் நீண்ட தூரங்களில் உள்ள மாவட்டங்களை கணக்கில் எடுத்து கொண்டு கூடுதலாக மண்டல அலுவலகங்கள் பிரிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். சுமார் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பின்னர் நாகை, ஊட்டி, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மண்டலங்கள் நிர்வாக வசதிக்காக கடந்த 2013ம் ஆண்டு ஜீன் மாதம் 20ம் தேதி 110 விதியின் கீழ் ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர், நாகை, ஊட்டி, தூத்துக்குடி, திருப்பூரில் இயங்கும் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள் மூடல்: தொழிலாளர்கள் எதிர்ப்பு
- மூடல்
- மண்டல அலுவலகங்கள்
- திருவள்ளூர்
- நாகை
- தூத்துக்குடி
- திருப்பூர்
- ஊட்டி
- திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழகம்