புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்குள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மேலும் ₹30,000 ேகாடி டிவிடென்ட் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மோசமான சரிவை சந்தித்துள்ள, நிலையில், மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்காக ரிசர்வ் வங்கி உபரி நிதி ₹1.76 லட்சம் கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ₹28,000 கோடியை வழங்கியது. 2017-18 நிதியாண்டில் ₹10,000 கோடி டிவிடென்ட் வழங்கப்பட்டது.