மேலூர்: மேலூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த மலைப்பாம்பு கோழிகளை விழுங்கியது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சானிபட்டியில் சமீபகாலமாக பலரின் வளர்ப்பு கோழிகள் மற்றும் அதன் குஞ்சுகள் திருடு போய்க் கொண்டிருந்தது. திடீர் திடீரென கோழிகள் காணாமல் போனதால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று குடியிருப்பு பகுதியில் ஒரு கோழியை விழுங்கிக் கொண்டிருந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை கிராமத்தினர் பார்த்தனர்.