சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், மேல் திருவடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (24), வேன் டிரைவரான இவர், ஆவடியில் தங்கி, திருநின்றவூர் கோமதிபுரத்தில் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 26ம் தேதி சிறுமியை ராஜதுரை சொந்த ஊருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு, சிறுமிக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ேபாலீசார், திருவண்ணாமலை சென்று, சிறுமியை மீட்டனர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜதுரையை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
* அமைந்தகரை பி.பி. தோட்டம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பாபு (59) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற திருமங்கலம் பாடி குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். * சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாச்சியப்பன் (38), மேற்கு மாம்பலம் தனசேகர் தெருவில் தங்கி, திரைப்படங்களுக்கு போட்டோ எடுக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த அசோக்நகர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அழுகிய நிலையில் நாச்சியப்பன் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்னர்.
* தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (38), சென்னையில் தள்ளுவண்டியில் பூச்செடிகளை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியில் பூச்செடி விற்பனை செய்தபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.* ராயபுரம் ஆதாம் தெருவில் உள்ள செங்காளம்மன் பரமேஸ்வரி, அங்காளம்மன் பரமேஸ்வரி ஆகிய 2 கோயில்களின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உண்டியல் பணம் மற்றும் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டரை கொள்ளையடித்து சென்றனர்.* அயனாவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத்குமார் (50), லோகநாதன் (29) மற்றும் ராகவேலு (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.* பூந்தமல்லி, தேவி நகரை சேர்ந்த ராஜேந்திரன் (57) என்பவரின் ஆட்டோவை திருடி, கோயம்பேடு பகுதியில் சவாரி ஓட்டி வந்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது பெரோஸ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.