சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம், மேற்கு செல்ல பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பரமேஸ்வரி (21), சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் கேஷியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக மன உளைச்சல் காரணமாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்த பரமேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு துணிக்கடையின் விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில், தலைக்கு அடிக்கும் ஹேர்டையை குடித்து மயங்கினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த சக ஊழியர்கள், பரமேஸ்வரி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.