நியூயார்க்: பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் ஒரே நாடு பாகிஸ்தான் தான் என இந்தியா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதை இம்ரான்கானால் மறுக்க முடியுமா என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இம்ரான் கான் பேசியதற்கு பதில் உரையாக இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசியதாவது:- ஐநா சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபருக்கு பென்சன் அளிக்கும் ஒரே நாடு தாங்கள்தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளுமா? அணு ஆயுத போர் வெடிக்கும் என்று இம்ரான் கான் மிரட்டுவது சிறந்த நிர்வாகிக்கான தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார்.