கோவை: கோவையில் பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக வனத்துறையில் 168 பெண்கள் உள்பட 550 வனக்காப்பாளர், 45 டிரைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், கடந்த 6 மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிறைவுபெற்றுள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா ேநற்று நடந்தது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 550 பேருக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார். பயிற்சி மற்றும் பாடப்பிரிவு உள்பட அனைத்திலும் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த அனில் விக்னேசுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி, பாராட்டினார். இதையொட்டி, நடந்த வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.