திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி (36). இவர் நத்தர்ஷா தெருவில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக உயரதிகாரிகள், இவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர், பரமேஸ்வரியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி இரவு வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.