அருண்ஜெட்லி, ராம்ஜெத்மலானி எம்.பி. இடங்களுக்கு தேர்தல்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண்ஜெட்லி மற்றும் ராம்ஜெத்மலானியின், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 16ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் இன்றே ெதாடங்குகிறது. அருண் ஜெட்லி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜ சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராம்ஜெத்மலானி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் பீகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அருண் ஜெட்லியின் பதவிக்காலம் 2 ஏப்ரல் 2024 வரையிலும், ராம்ஜெத்மலானியின் பதவிக்காலம் 7 ஜூலை 2022 வரையிலும் உள்ளது.

Related Stories: