ராஞ்சி: ‘ஜார்கண்ட் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரபேற்பதற்காக அளிக்கும் மலர்கொத்தில் பிளாஸ்டிக்கு பதிலாக காகிதம் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை ஜார்கண்ட் செல்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வருகிறார். ராஞ்சியில் உள்ள பிரிசா முண்டா விமான நிலையத்தில் மலர்கொத்து ெகாடுத்து அவர் வரவேற்கப்படுகிறார். மலர்கொத்தில் பிளாஸ்டிக்கு பதிலாக காகிதம் சுற்றப்பட்டு இருக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.