சின்னமனூர்: சின்னமனூரில் வறட்சியை சமாளிக்க சொட்டுநீரை வீணாக்காமல் பயன்படுத்த ஸ்பிரிங்லர் முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். சின்னமனூர் நகர ஒன்றிய கிராமங்களில் பெரியாறு மற்றும் மழையால் நிலத்தடிநீர் பாசனத்தில் தொடர் விவசாயம் நடைபெறுகிறது. அதன்படி பெரியாறு ஆற்று பாசனத்தில் நான்காயிரம் ஏக்கரில் இருபோகம் நெல் சாகுபடி நடக்கிறது. மேலும் நிலத்தடிநீர் பாசனத்தின் மூலம் வாழை, திராட்சை, தென்னை, புடலை, கத்திரி, வெங்காயம், கேரட், சீனி அவரை, வெண்டைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோசு, காலி பிளவர் போன்ற பயிர்களும் சாகுபடி நடக்கிறது. பருவமழை பொய்த்தாலும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பாசனநீர் வீணாகாமல் விவசாயத்தை விவசாயிகள் விரிவு படுத்தி செய்து வருகின்றனர்.