ஜெருசலேம்: இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க வரும்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அதிபர் ரியுவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிகுத் கட்சி உள்பட எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் பிரதமர் நெதன்யாகுவை புதிய அரசு அமைக்க வரும்படி அதிபர் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். புதிய அரசு அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக 2 நாள்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது 55 எம்.பி.க்கள் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இணைய ஒப்புக் கொண்டதாகவும் ரிவ்லின் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஜின் ப்ளு வொயிட் கட்சியும், லிகுத் கட்சிக்கு இணையாக வெற்றி பெற்றுள்ளது. கான்ட்ஜுக்கு 54 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எனினும், 10 பேர், அரேபிய யூதர்கள் ஆவர்.