சென்னை: சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டத்தில் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்காக பிரிட்டிஷ் துணை தூதரகத்துடன் இணைந்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசும், பிரிட்டிஷ் துணை தூதரகமும் இணைந்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் அபாயங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் பிரிட்டிஷ் துணை தூதர் ஆல்வின் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த காலங்களில் பேரிடர் மேலாண்மையானது நிவாரண பணிகளை சார்ந்தே இருந்தது. தற்போது பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பேரிடர் அபாயம் குறித்து மதிப்பீடு அபாய தகவல் தொடர்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை, உடனடி அவசர கால மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது.சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பேரிடர் அபாயத்தை குறைக்க ஆய்வு: பிரிட்டிஷ் துணை தூதரகத்துடன் ஒப்பந்தம்,.. தமிழக அரசு நடவடிக்கை
- காஞ்சிபுரம்
- சென்னை
- பிரிட்டிஷ்
- தூதரகம்
- மாவட்டங்களில்
- செயல் குறைப்பு
- கடலூர்
- தமிழ்நாடு அரசு
- கடலூர் மாவட்டங்கள்