காவேரிப்பாக்கம்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் மேம்பாலத்தில் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்கி எடுத்துச்சென்று அடக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காவேரிப்பாக்கம் அருகே நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி அபிராமச்சேரி முதல் வார்டில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதனால் ஊரின் கிழக்கு பகுதியில் சுமார் ஒன்றரை கிமீ தொலைவில் உள்ள, சுடுகாட்டிற்கு சடலத்தை நேற்று உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் எடுத்து சென்றனர்.