தூத்துக்குடி: NSS துவங்கி 50வது ஆண்டினை முன்னிட்டு 12 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழகத்திலேயே தோன்றி தமிழகத்திலேயே கலக்கக்கூடிய ஒரு வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆகும்.நெல்லை மாநகர பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் கல்லூரி மாணவர்கள் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை போலவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான கீதா ஜீவன் கலை, அறிவியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரிகளை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 7 கட்டங்களாக பிரித்து ஏரல், சேயாத்தூர், முக்காணி, சேதுபூமி மங்களம், மங்கலக்குறிச்சி உள்ளிட்ட 7 இடங்களில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.
தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்: 12 கல்லூரிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
- கல்லூரிகள்
- தூத்துக்குடி நதி திரிபபரானி நதி தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
- நதி சுத்தம்
- தூத்துக்குடி தமிராபராணி