திருமலை: ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தை, மின்சார பல்பை தொட்டால் அது பிரகாசமாக எரியும் அதிசயம் நிகழ்கிறது. இதற்கான காரணம் குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆந்திராவின் விலினாமண்டலம், தாமலசெருவு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு. இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தையின் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதாக அதன் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரிபாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டு வேலையில் இருந்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எல்இடி பல்பை குழந்தை கையில் எடுத்துள்ளது. குழந்தை தொட்டதும் திடீரென அந்த பல்ப் எரிந்தது. இதனை கண்ட ஹரிபாபுவும் சுஷ்மிதாவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையின் உடலில் வைத்தபோதும் அந்த பல்பு எரிந்துள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை தூக்கிச்சென்று அங்குள்ள தனியார் டாக்டரிடம் காண்பித்தனர்.