சுரண்டை: சுரண்டை பஸ் நிலையத்தில் இன்று காலை மனநிலை பாதித்த பெண் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சுரண்டை பஸ் நிலையம் இன்று காலை வழக்கம்போல் பரபரப்புடன் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசுமற்றும் தனியார் நிறுவன ஊழியர் கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். காலை 7.30 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று பஸ் நிலையத்தில் உள்ளே வந்தது. அப்போது பஸ்நிலையத்தில் சுற்றித்திரிந்த சுமார் 45 வயது மதிக்கத்த பெண், பஸ் வருவதை கண்டுகொள்ளாமல் சாலையின் குறுக்கே மனம்போனபடி சென்றார். இதை கவனித்த பஸ் டிரைவர், பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் கட்டுப்படுத்த முடியாததால் மனநிலை பாதித்த பெண் மீது மோதியது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.