நீலகிரியில் களைகட்டும் 2வது சீசன்

ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கியுள்ள  நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.  நீலகிரி  மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன்  காலமாகும். கடந்த மாதம் ேகரளாவில் பெய்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வர ஆர்வம்  காட்டாததால் இம்மாத துவக்கத்தில் ஊட்டியில் சுற்றுலா  பயணிகள் கூட்டமின்றி  வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கியுள்ள  நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகளவில்  சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு  வருகை தந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள  முக்கிய சுற்றுலா தளங்களில் மக்கள்  கூட்டம் காணப்பட்டது.  அதற்கேற்றார் போல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான  காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை மகிழ்ச்சியுடன்  பார்த்து ரசித்தனர். ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக  ஆர்வம்  காட்டினார்கள். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: