திருப்பூர் அருகே பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொல்லை கொடுத்த பள்ளி நிறுவனர் தலைமறைவு

திருப்பூர்: திருப்பூர் அருகே பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொல்லை கொடுத்த பள்ளி நிறுவனர் தலைமறைவானார். திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்த குருப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிறுவனர் ராஜசேகர்(50) விடுதியில் தங்கி படித்து வரும் ஏழை மாணவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் நலத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலத்துறையினர் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜசேகர் மீதான புகார் உண்மை என தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: