சென்னை: டாஸ்மாக் எம்.டி. தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் அனுமதி பெறாமல் இயங்கும் பார்களை மூடுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அனுமதி பெறாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களை தீவிர ஆய்வு செய்து மூடவேண்டும் என்று தலைமை அலுவலகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மாவட்ட மேலாளர்களும், முதுநிலை மண்டல மேலாளர்களும் கடந்த சில மாதங்களாகவே தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது.