மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் உயர்ந்து 37,767.13 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 450 புள்ளிகள் உயர்ந்து 11,156.70 என்ற வர்த்தகமாகி வருகிறது. காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் கிடுகிடு உயர்வுடன் வர்த்தமாகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக பங்குச்சந்தையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை நேற்று கால் சதவீதம் குறைத்தது. இருப்பினும், இன்னும் எந்த அளவுக்கு வட்டி குறைக்கப்படும் என்பதில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது.
வரி சலுகைளை அறிவித்த மத்திய நிதியமைச்சர்; மும்பை பங்குச்சந்தைகள் வராலாறு காணாத உயர்வு; முதலீட்டாளர்கள் உற்சாகம்
- மத்திய நிதி அமைச்சர்
- பங்குச் சந்தைகள்
- முதலீட்டாளர்கள்
- மும்பை
- சென்செக்ஸ்
- நிர்மலா சீதாராமன்
- தேசிய பங்குச் சந்தை
- நாகரீகமான