உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் பாலியல் புகாரில் கைது

ஷாஜகான்பூர்; உத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜகான்பூர் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த சின்மயானந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது உத்தரப்பிர தேசம் ஷாஜ ஹான்பூரைச் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கு சின்மயானந்த் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும், ஏராள மான பெண்களை சின்மயானந்த் சீரழித்துள்ளார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த மாணவி, காணொலி ஒன்றையும் வெளியிட்டார். அதில் தனக்கு உதவ வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத்துக்கும் கோரிக்கை விடுத்தார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 27ஆம் தேதி காவல்துறையினர் சின்மயானந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த மாணவி காணொலி வெளியிட்ட நிலையில் அப்போது இருந்து திடீரென காணாமல் போனார். தங்கள் மகளைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்து உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர்.

சட்டக்கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து காவல்துறையினர் மீட்டு 30.8.2019 அன்று இரவு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டக்கல்லூரி மாணவி அளித்த 2 புகார்களையும் விசாரணை செய்வதற்கு ஐஜி தகுதியில் உள்ள காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும், அதில் காவல்துறை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒரு அதிகாரி இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்த குழுவின் விசாரணயை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: