கரூர்: வழக்கு நிலுவையில் இருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கியதாக தாசில்தார் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருச்சியில் இருந்து கடந்த 1995ம் ஆண்டு கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கென தாந்தோணிமலை அருகில் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. இதற்காக தனியாருக்கு சொந்தமான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட 6.75 ஏக்கர் நிலங்களுக்கு ரூ.5.14 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இவர்களில் சிலர் இழப்பீடு கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.