கோவையில் குப்பை கொட்டும் இடங்களில் வண்ணக் கோலம்: மாநகராட்சி அதிகாரிகள் புதிய நடவடிக்கை

கோவை: பொது இடங்களில் மக்கள் குப்பைகளை கொட்டுவதை தடுக்க கோவை மாநகராட்சி நூதகமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் வர்த்தக நகரமான கோவையில் பொது இடங்களில் குப்பைகள் குவிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த நிலையில் எதுவும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக தற்போது நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் சாணம் தெளித்து பூக்கோலம் இட்டு நகரை அழகுபடுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் கோவையை தூய்மைப்படுத்தும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் பொதுமக்கள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்களின் ஒத்துழைப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ள கோவை மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரித்து போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என எழுதப்பட்ட குப்பை தொட்டிகளை பொது இடங்களில் வைத்துள்ளனர். கோவையை தூய்மைப்படுத்தும் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனினும் அனைத்து பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைக்க முன்வந்தால் மட்டுமே கோவையை தூய்மையான நகரமாக மாற்ற முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: