ஓசூர்: ஓசூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திப்பாளம் கிராமத்தில், முனிராஜ் என்பவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்னர் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வர சென்றபோது, ஒரு ஆடு காணாமல் போனது. தொடர்ந்து, முனிராஜ் அப்பகுதியில் தேடி பார்த்தபோது அங்குள்ள பாறைக்கு அருகே புதர் மறைவில் மலைப்பாம்பு ஒன்று அவரது ஆட்டை விழுங்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த முனிராஜ் அருகிலுள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.