கரூர்: கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் சீதப்பட்டி பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் மீண்டும் முகிலனை 29ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.