நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 2 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு அண்ணாநகர் பகுதியில் விவசாயி ராமர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான ஆடு ஒன்றை இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று தூக்கி செல்லும் காட்சி அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை தொடர்ந்து ராமர் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு சிறுத்தையை பிடிப்பதற்காக அண்ணாநகர் ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கூண்டுகளை வைத்து சென்றனர்.