140 கிடங்குகளில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

கோவை: நுகர்வோர் வாணிபக் கழகத்தின் 140 கிடங்குகளில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். கோவை கருத்தம்பட்டியில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தை தொடக்கி வைத்து அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சுமை தூக்கும் தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் பயன்படுத்தப்படும். ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: