உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே எம்.குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீதானத்து அய்யனார் கோயிலில் எம்.குண்ணத்தூர் மற்றும் சுற்றியுள்ள 7 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கல் பானைகளை கோயிலில் படையல் வைத்து வழிபாடு செய்தனர்.