ஒரு மாதம் பரோல் கேட்ட முருகன் மனு நிராகரிப்பு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, மகள் திருமண ஏற்பாட்டை கவனிப்பதற்காக ஒரு மாத பரோலில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியில் வந்து சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார். அவருக்கு ேமலும் 3 வாரம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள அவரது கணவர் முருகனும் ஒரு மாதம் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். அவரது மனுவை நிராகரித்து சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் நளினியின் பரோல் வரும் 14ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்று மாலை 5 மணிக்குள் வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு அவர் திரும்ப வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: