மணமேல்குடி : கோட்டைப்பட்டிணம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 233 விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்த்த ஹபீப் ரகுமான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த ஜெரோன்(24), கெம்ப்லஸ்(56), மெக்சன்(29), ரவி (19) ஆகிய 4 பேரும் சென்றனர்.