மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரர், பிட்டுக்கு மண் சுமந்த லீலை கோலாகலமாக நேற்று நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா, சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை மையமாகக் கொண்டு ெகாண்டாடப்படுகிறது. சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிளையாடல் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, மீனாட்சி அம்மனுடன் மேள, தாளங்கள் முழங்க கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள சொக்கநாதர் கோயிலுக்கு வந்தனர்.