லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய பிரதமரான போரீஸ் ஜான்சன், ஒப்பந்தமின்றி வெளியேறுவதில் குறியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக நாடாளுமன்றம் கடந்த 3ம் தேதி தொடங்கிய நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்க பிரதமர் போரீஸ் ஜான்சன் நடவடிக்கை மேற்கொண்டார்.